சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சித்திரை மாத பிரதோஷம்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமி சிறப்பு பூஜைக்காக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இன்று முதல் வரும் 5 ஆம் தேதி வரை 3 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.காய்ச்சல் சளி,இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.10 வயதுக்குள் உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது.அதேபோல் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும், கோவிலுக்கு வருபவர்கள்.மலைப்பாதைகளில் உள்ள நீர் ஓடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை கிடையது.அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் அனுமதி வழங்கப்பட்ட முதல் நாளன இன்று உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சதுரகிரி சுந்தர மகாலிங்கத்தை சாமி தரிசனம் செய்து வந்தனர்.vilupuramTimesXP TamilUpdated: 3 May 2023, 5:26 pm