திண்டிவனம் அருகே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளுடன் தாய்!
Subscribe விழுப்புரம் videos
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்மலையனூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான கிருஷ்ணவேணி இருளர் இணைத்தைச் சேர்ந்த பெண்ணான கிருஷ்ணவேணி எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார் அதன் பின்னர் திருமணம் முடிந்ததால் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, மேலும் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன குடும்பத்தை கட்டிக் காக்க வேண்டிய கணவன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்ற பிள்ளைகளையும் மனைவியும் தவிக்க விட்டு வேற ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வேறு ஒரு வாழ்க்கைக்கு சென்று விட்டார், செய்வது அறியாத தவித்துக் கொண்டிருந்த கிருஷ்ணவேணி தனது தாய் தந்தையின் வீட்டில் தஞ்சம் அடைந்து விவசாய வேலைகளையும் அன்றாட வேலைகளையும் செய்து தனது மூன்று பிள்ளைகளையும் வளர்த்து வருகிறார், அதில் வரும் வருமானத்தின் மூலம் தனது மூன்று பிள்ளைகளையும் வளர்க்க முடியாமல் தவித்து வந்த கிருஷ்ணவேணி எப்படியாவது அரசு பணி பெற்று அதன் மூலம் தனது பிள்ளைகளை வளர்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டு தான் எட்டாம் வகுப்பு படித்த சான்றிதழ் வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அரசு வேலை வேண்டுமென பலமுறை மனு அளித்துள்ளார், ஆனால் அரசு வேலைக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு என்பதால் பல இடங்களில் தட்டிக் கழிக்கப்பட்டுள்ளார் இதனையடுத்து எப்படியாவது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என எண்ணி தனது மகளுடன் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடிவு செய்துள்ளார், அவரது மூத்த மகள் கவிதாவும் தாதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார், இதை பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணவேணி தனது மகளுடன் சேர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துள்ளார், தனது அம்மாவிற்கு மகள் கவிதாவும் உதவியாக இருந்து தான் அன்றாடம் பள்ளிகளில் கற்கும் பாடத்தை தனது அம்மாவிற்கும் சொல்லிக் கொடுத்துள்ளார், அதன்படி தனித் தேர்வில் பொதுத் தேர்வு எழுதி 206 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார், மேலும் இவரது மகள் கவிதாவும் 292 மதிப்பெண்கள் பெற்றுள்ளார், 3 மகள்களை வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்பதை மட்டுமே எண்ணி படித்த கிருஷ்ணவேணியின் செயல் அந்த கிராம மக்களின் மட்டுமின்றி அனைத்து தாய்மார்களையும் நெகிழ்ச்சி அடைய செய்கிறது முன்னேற வேண்டும் என துடிக்கும் கிருஷ்ணவேணிக்கு தமிழக அரசு ஏதாவது ஒரு வேலையை வழங்கி கௌரவிக்க வேண்டும் என்பதே இங்குள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.