தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது!
1038 views
Subscribe விழுப்புரம் videosகள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கீழ்ப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் விவசாயி. இவரது மனைவி சுதா மற்றும் இவரது மகள் ஆகியோர் சென்னை செல்வதற்காக தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது சுதா தன் கையில் வைத்திருந்த பையை அருகில் இருந்த சிமெண்ட் கட்டையின் மீது வைத்துள்ளார். சற்று நேரத்தில் திரும்பிப் பார்க்கும்போது பையில் இருந்த பர்ஸ் மற்றும் அதில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணம் காணவில்லை. இதுகுறித்து சுதா தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர், விசாரணையில் மதுரை மாவட்டம் தத்தனேரி செல்லூர் கிராமத்தைச் தமிழ்ச்செல்வி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மூக்காயி ஆகிய இருவரும் பணத்தை திருடியது தெரியவந்தது. அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.