நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவ காரணமான துழாவூர் ஆதீனத்திற்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு!
1020 views
Subscribe தமிழ்நாடு videosகாரைக்குடி அருகே உள்ள துழாவூர் 29 ஆவது ஆதீனமாக இருப்பவர் ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள். பிரதமரின் அழைப்பை ஏற்று புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு ஊர் திரும்பியவருக்கு கிராம மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;பிரதமரின் மோடி அறிவுறுத்தலின் பேரில், வடநாட்டுக்காரர்கள் மடத்துக்கு வந்தனர். காசியில் கலந்து கொண்டது போல் நாடாளுமன்ற திறப்பு விழாவிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். அவர்களிடம், திருவாடுதுறை ஆதீனம் மூலம் வழங்கப்பட்ட செங்கோல் குறித்து கூறினேன். செங்கோல் படம் உள்ளதா என்று கேட்டனர். டைரியில் இருந்த படத்தைக் காட்டினேன். அதை போட்டோ எடுத்துக் கொண்டு சென்றார்கள். அது குறித்து அவர்கள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பேரில், திருவாடுதுறை ஆதீனம் மூலம் செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு தனி விமான மூலம் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டோம். நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவும் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டோம் என தெரிவித்தார்