நாகை அருகே கப்பி சாலையை தார் சாலையாக மாற்ற கிராம மக்கள் கோரிக்கை!
1015 views
Subscribe தமிழ்நாடு videosநாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி மணல்மேடு வடக்கு பகுதியில் உள்ள காமேஸ்வரம் - விழுந்தமாவடி எல்லை மீனவர் காலனி செல்லும் சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு காய்கறி சாகுபடியே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர் இக் கிராமத்திலிருந்து மீனவர் காலனி செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கப்பி மற்றும் மணல் சாலையாகவே உள்ளதால் இவ்வழியே செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் மேலும் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட வர ஓகே சிரமப்படுகின்றனர் இதனால் உயிர் இழப்புகளும் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் 5 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்தும் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் தார்சாலை போடப்படவில்லை மழைக் காலங்களிலும் சாலைகள் குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி நிற்கிறது இதனால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத ஓகே உருவாகி உள்ளது மேலும் , தெருவிளக்கு இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் கிராம மக்கள் அரசுக்கு சாலை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் அரசு சாலை வசதி அமைத்துத் தராவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.