அத்தியாவசிய அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்…
1018 views
Subscribe தமிழ்நாடு videosஅத்தியாவசிய அடிப்படை வசதிகளை செய்துதராத திமுக அரசை கண்டித்து கோவில்திருமாளம் பகுதியில் கிராம மக்கள் காரைக்கால் சாலையில் திடிரென அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டத்தை அடுத்த கோவில்திருமாளம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டாரவாடை திருமாளம் கிராமத்திற்கு உட்பட்ட சாணாந்தோப்பு தெருவில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் இன சமுதாயத்தினர் வசித்து வருகின்றனர். இத்தெருவிற்கு தேவையான சாலைவசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு என எந்தவொரு அத்தியாவசிய அடிப்படை வசதிகள் இன்றி கடந்த 5 ஆண்டுகாலமாக அப்பகுதிமக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். மேலும் இது சம்மந்தமாக சாணாந்தோப்பு பகுதிமக்கள் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பல உயர் அதிகாரிகளிடம் தங்களது பகுதிக்கு அத்தியாவசிய அடிப்படை வசதிகள் வேண்டி பலமுறை மனு அளித்தபோதிலும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் சாணாந்தோப்பு பகுதியில் வசிக்கும் பாஜகவை சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் தமிழரசன் அதிகாரிகள் துணையுடன் சாலைவசதி, குடிநீர் வசதியை ஏற்படுத்தி தராமல் அராஜகத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில் சாணாந்தோப்பு தெருமக்கள் தங்களது குழந்தைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுக அரசை கண்டித்து இன்று பூந்தோட்டம்-காரைக்கால் சாலைமார்க்கத்தில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த பேரளம் காவல்துறையினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒருமையில் பேசியும், பெண்களை அச்சுறுத்தியும் போராட்டத்தை கைவிட கோரினர். இந்நிலையில் வருவாய்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் சாலை அமைத்துதரப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலைமறியல் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்.