அரசு மதுபான கடைகளில் 10 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள்!
1029 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தர்மத்துப்பட்டி ஊராட்சி கொரலப்பட்டியில் 3303 என்ற அரசு மதுபான கடை உள்ளது இக்கடையில் சூப்பர்வைசர் பூமிராஜ் என்பவர் பணி செய்து வருகிறார் இந்நிலையில் இன்று தர்மத்துப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ள குடிமகன்கள் மதுபான கடை திறந்தவுடன் மதுபானங்களை வாங்குவதற்காக வந்துள்ளனர் அப்போது சூப்பர்வைசர் அரசு நிர்ணயித்த விலையை விட பத்து ரூபாய் கூடுதலாக குடிமகன்கள் இடம் தொடர்ந்து வாங்கி வந்துள்ளார் இதில் குடிமகன்கள் பத்து ரூபாய் வாங்க கூடாது என அரசு அறிவித்துள்ளது யாருக்காக வாங்குகிறீர்கள் என்று கேட்ட பொழுது மதுபான பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக தான் விற்பனை செய்வேன் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக் கொள் என்று மிரட்டியும் அதேபோல் குடிமகன்களை ஆபாசமாக பேசியும் உள்ளார் அதேபோல் மதுபான கடையில் தனி நபர்களை பணியில் அமர்த்தியுள்ளார் அவர்களும் தங்கள் பங்கிற்கு கேள்வி கேட்கும் குடிமகன்களை ஆபாசமாக திட்டுவதும் எங்கு வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று மிரட்டியும் உள்ளனர்மேலும் குடிமகன்கள் நாங்கள் வாங்கிய பாட்டிற்கு உரிய ரசீது வழங்குங்கள் என்று கேட்ட பொழுது கடையின் சூப்பர்வைசர் பூமி ராஜ் ரசீது ஒன்றை வழங்கியுள்ளார் அதில் எவ்வளவு தெளிவாக இருக்க வேண்டுமோ அவ்வளவு தெளிவாக யாருக்கும் புரியாத அளவிற்கு ஏமாற்று ரசீதை எழுதிக் கொடுத்தது குடிமகன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுகடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளில் கூடுதலாக பத்து ரூபாய் பாட்டிலுக்கு விற்பனை செய்வதாக துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் செய்தியாளர்கள் கேட்டும் தொடர்ந்து செய்தியும் வெளியிட்டனர் இந்நிலையில் அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது ஆனால் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு ஊரகத்துறை அமைச்சர் தொகுதியிலேயே பத்து ரூபாய் கூடுதல் விலைக்கு சூப்பர்வைசர் விற்பனை செய்து மிரட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் பரவி வருகிறது