குப்பை கிடங்கு அபிப்பதை கண்டித்து கிராம மக்கள் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்!
1039 views
Subscribe வேலூர் videosதிருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் நகரின் மையப் பகுதியில் உள்ளதாலும் இந்த குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தது.அதன்படி திருவண்ணாமலை அருகே உள்ள தேவனந்தல் பகுதியில் சுமார் 6 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் புணல் காடு மலைக்குன்று அடிவாரப் பகுதிகளை அழித்து குப்பை கிடங்கை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேவனந்தல்,புனல் காடு, கலர் கொட்டா உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கே குப்பை கிடங்கை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் புனல் காடு பகுதியில் குப்பை கிடங்கை அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலத்தை சமம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து 16 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது போராடும் கிராம மக்களுடன் விவசாய சங்கம் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் விவசாயம், குடிநீர், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று குப்பை கிடங்கினால் இந்த பகுதியில் உள்ள பசுமை மரங்கள் அழிந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தாங்கள் பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்று கிராம மக்கள் குப்பை கிடங்கு அமைக்கப்படுவதை எதிர்த்து கைகுழந்தைகளுடன் போராட்ட இடத்தில் சமைத்து உண்டு, உறங்கி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தங்களது கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் குப்பை கிடங்கு அமைப்பதை கைவிட வேண்டும் என்றும், இல்லையென்றால் தாங்கள் போராட்ட இடத்திலேயே தங்கி சமைத்து, உண்டு, உறங்கி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.இந்நிலையில் போராட்டத்தின் 17வது நாளாக நேற்று இந்த இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பசுமை மரங்களை இழந்து அதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை உணர்த்தும் விதமாக கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தங்கள் தள்ளப்படுவோம் என்பதை உணர்த்தும் விதமாக பசுமை மரக்கிளைகளுடன் திருவோடு பாத்திரத்தை கையில் ஏந்தி நூதன பிச்சை எடுக்கும் போராட்டத்தை நேற்று மாலை கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் நடத்தினர்.தங்களது கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் வேலையை மாவட்ட நிர்வாகம் கைவிட தவறினால் இதுபோன்று தொடர் போராட்டத்தில் தங்கள் ஈடுபடுவோம் என்று விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.