செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்ட ஜமாபந்தி நிறைவு விழா!
1037 views
Subscribe வேலூர் videosதிருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்ட அலுவலகத்தில் கடந்த 19ம் தேதி ஜமாபந்தி தொடங்கியது. செய்யாறு சப் கலெக்டர் ஆர்.அனாமிகா ஜமாபந்தி அலுவலராக பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று துறை வாரியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் கிராம கணக்குகளை சரிபார்த்தார். ஜமாபந்தியின் நிறைவு நாள் மற்றும் விவசாயிகள் மாநாடு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு செய்யாறு சப் கலெக்டர் ஆர்.அனாமிகா தலைமை தாங்கினார். வெம்பாக்கம் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கடந்த 19ம் தேதி தொடங்கிய ஜமாபந்தியில் மொத்தம் 429 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 75 மனுக்கள் ஏற்கப்பட்டன. 354 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய செய்யாறு எம்எல்ஏ ஜோதி பேசுகையில் குறிப்பிடத்தாவது,காலப்போக்கில் இன்றைக்கு அனைத்தும் ஆன்லைன்ல மாறிவிட்டது நேரடியாக உடனடியாக இன்றைக்கு அதுவும் நம்முடைய முதல்வருடைய ஆட்சியில் மிக சிறப்பாக மக்களுக்கான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பட்டாக்கள் உடனடியாக பதிவு செய்த உடனே பட்டாக்கள் மாறுகிறது. வருகின்றவர்களுக்கு இன்முகத்தோடு அவர்கள் கேட்கின்ற குறைகளை அதில் செய்ய முடியாத குறையாக இருந்தால் கூட இது நடக்காது என்று சொல்லி அவர்களுக்கு இன்முகத்தோடு இப்படி செய் மாற்றி செய்வதற்கு வழி இருக்கிறது என மக்களுக்கு நீங்கள் எடுத்து கூறி பணியாற்ற வேண்டும் இந்த ஆட்சியைப் பொருத்தவரையில் முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கான ஆட்சி செய்கிறார் இன்றைக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றால் ஒரு கோடி ரூபாய்க்கு வேலை நடைபெறுகிறது தார் சாலை கழிவுநீர்கால்வாய் என பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டது இதைத்தான் நம்முடைய முதல்வர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டம் தேர்தல் காலத்திலே சொன்ன வாக்குறுதி 80% நிறைவேற்றப்பட்டது 6 லட்சம் கோடி கடன் வைத்திருந்தாலும் கூட சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே தலைவர் நம்முடைய முதல்வர் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்டி இன்றைய அதேபோல் விவசாயத்திற்கு தனிப்பட்ஜெட் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. விவசாயிகள் இலவச மின்சாரம் இன்றைக்கு நமக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் டாக்டர் கலைஞர் இல்லை என்று சொன்னால் விவசாயிகள் கணக்கு பார்த்தால் உழவுக்கு கூட மிஞ்சாது என கூறுவார்கள் இங்கே மனுக்கள் கொடுத்து இருக்கிறார்கள் 429 மனு கொடுத்திருக்காங்க அதுல ஏற்கப்பட்டது 75 தான் ஏற்கப்பட்டது உங்கள நம்பி வந்து எல்லாரும் மனு கொடுத்து இருக்காங்க சார் ஆட்சியர் அவர்களுடைய ஆலோசனைக்கு கொண்டு சென்று கண்டிப்பாக செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என பேசினார்.