தண்ணீர் குடித்த வெள்ளாடுகள் மர்மமான முறையில் இறப்பு அப்பகுதியில் சோகம்!
1080 views
Subscribe வேலூர் videosவேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல் மாயில் பஞ்சாயத்து துருகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி இவருக்கு சொந்தமாக 50 ஆடுகள் உள்ளது. ஆடுகள் துருகம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக போய்விட்டு வழக்கம் போல் வீட்டின் அருகில் உள்ள தொட்டியில் தண்ணீர் குடிக்க வருவதுண்டு. இந்நிலையில் இன்று மேச்சலுக்கு சென்ற ஆடுகள் வீட்டுக்கு வந்து தண்ணீர் தொட்டியில் 13 ஆடுகள் தண்ணீர் குடித்தது. குடித்த சிறிது நேரத்தில்13 ஆடுகள் கீழே விழந்தது.உடனே கிழேவிழுந்த ஆடுகளை ரவி சோதனை செய்துள்ளார் சோதனையின் பின்னரே 13 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.இது குறித்து ரவியின் மனைவி கஸ்தூரி கே.வி.குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். கே.வி.குப்பம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு வைத்து ஜீவனம் செய்து வரும் ரவியின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த சோகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.