அண்ணாமலையார் கோவிலுக்கு அளிக்கப்பட்ட பட்டுப்புடவை ஏலம் வீடியோ வைரல்!
1053 views
Subscribe வேலூர் videosஅண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்கள் அளித்த புது பட்டு துணிகள் ஏலம் விடும் நிகழ்வு-இணையதளத்தில் வைரலாகி பரப்பரப்பை ஏற்பட்டுள்ளது.பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி, ஒவ்வொரு மாதம் வரும் பௌர்ணமி கிரிவலம் உலகப் பிரசித்தி பெற்றது. குறிப்பாக கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் சித்ரா பௌர்ணமி ஆகிய இரண்டு தினங்களில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் மலையையே சிவனாக கருதி கிரிவலம் மேற்கொள்வார்கள்.தமிழக மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொள்வார்கள்.மேலும் வருடம் முழுவதும் அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் பக்தர்கள் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பட்டு வேஷ்டிகள், பட்டு புடவைகள் உள்ளிட்ட பல ஆடைகளை காணிக்கையாக செலுத்துவார்கள்.இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அண்ணாமலையார் திருக்கோவில் உள்துறை அலுவலகம் முன்பாக அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு வழங்கப்பட்ட ஆடைகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டது. இதில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடைகள் ஏலம் போகவில்லை.இதனால் இன்று வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் உள்ள நிலையில் அண்ணாமலையார் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.வைகாசி மாத பௌர்ணமி இன்று உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்று கருதி திருக்கோயில் நிர்வாகம் இன்று அன்னதானம் கூடத்திற்கு அருகே அண்ணாமலையார் மற்றும் அண்ணாமுலை அம்மனுக்கு வழங்கப்பட்ட பட்டுப் புடவைகள் பட்டு வேஷ்டிகள் உள்ளிட்ட வஸ்திரங்களை திருக்கோயில் நிர்வாகம் ஏலம் விட்டது.எப்படியாவது இந்தத் துணிகளை ஏலம் விட்டு அதன் மூலம் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்யும் நோக்கோடு அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் கிரிவலம் அன்று செயல்பட்ட நிகழ்வு பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இந்த ஏல நிகழ்வு சமூக வலைத்தளங்களில் தற்போது வயது ஆகி உள்ளது.