ராணிப்பேட்டையில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் வரமதி ஆய்வு செய்தார்!
1034 views
Subscribe வேலூர் videosராணிப்பேட்டை மாவட்டம் ஆட்டோ நகர் பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 250-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது.மேலும் நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியினை தொடங்கி வைத்த பின்னர் ஆய்வு செய்த ஆட்சியர் பள்ளி வாகனங்கள் அனைத்தும் தரம் குறித்தும் அதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்து வாகன ஓட்டுநர்களிடம் கேட்டறிந்தார் பிறகு பள்ளி பேருந்துகளில் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் வகையில் அதனை உடனடியாக நிவர்த்தி செய்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு வாகனங்களில் தீ விபத்து உள்ளிட்ட விபத்து காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கையாள்வது குறித்து ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சியை தீயணைப்பு துறை வீரர்கள் தத்ரூபமான முறையில் நடித்து காண்பிக்கப்பட்டது..