வந்தே பாரத் ரயிலை வரவேற்ற பாஜகவினர்!
1021 views
Subscribe வேலூர் videosபாரத பிரதமர் மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் அதிவேக ரயிலை காட்பாடி சந்திப்பில் வரவேற்ற பாஜகவினர்இன்று கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியாசைத்து வைத்து வந்தே பாரத் (மைசூர் - சென்னை) ரயிலை துவக்கி வைத்தார்.இந்த ரயிலானது இந்தியாவிலேயே அதிவேக ரயில் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.பெங்களுரில் பிரதமரால் துவங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் இன்று மாலை 4 மணியளவில் காட்பாடி ரயில் நிலையம் வந்தது இந்த ரயிலை பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் நரேந்திரன் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி தலைமையில் பாஜகவினர் மலர் தூவி வரவேற்றனர்.வந்தே பாரத் ரயில் திட்டத்தை 2019 ஆம் ஆண்டு வட இந்திய பகுதியில் பாரத பிரதமர் துவக்கி வைத்தார். அனைத்து மாநிலங்களிலும் வந்தே பாரத் சேவைகள் விரைவில் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.