இந்திய அளவில் 55 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை தமிழக துணை சபாநாயகர் புருமிதம் பெற்றுள்ளார்!
1043 views
Subscribe வேலூர் videosதிருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நிகழ்வுகளில் தமிழக துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி கலந்துகொண்டுடார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழை தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.இதைத் தொடர்ந்து இந்த விழாவில் பேசிய தமிழக துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி இந்தியாவிலேயே 55 சதவீதம் படிக்கும் மாநிலமாக உள்ளது என்றும் அகில இந்திய அளவில் உயர் கல்வியில் 27% படிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் தமிழகத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிக தேர்ச்சி பெறுபவர்கள் மாணவிகளாகத்தான் உள்ளார்கள் என்றும் அந்த வகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் பெண்கள் கல்வியை கற்று வருவதினால் தான் தமிழகம் முதலிடம் ஆக உள்ளது என்றும் உரையாற்றினார். இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் அதிக அளவு கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது என்றும் அதனால் தான் பெண்கள் அதிக அளவு உயர்கல்வியில் படித்து வருகிறார்கள் என்றும் பெண்களைப் படிக்க வேண்டும் என்பதற்காகவே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பள்ளி கல்லூரியில் பயிலும் பெண்களுக்காக பல திட்டங்களை அறிவித்து பெண்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகவே அயராது பாடுபட்டு வருகின்றனர் என்றும் தமிழக துணை சபாநாயகர் தெரிவித்தார்.குறிப்பாக பெண்களுக்கு என்று பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் செல்வதும், கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் புதுமைப்பெண் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, திட்டங்களை பெண்களுக்காக திமுக அரசு வழங்கி வருகிறது என்றும் தமிழக துணை சபாநாயகர் உரையாற்றினார்.மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே ஊக்கத்தொகை அளித்து பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருவதாகவும் தமிழக துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி உரையாற்றினார்.