கோணலூர் ஏரியில் வெளிநாட்டு பறவைகள் வருகை மக்கள் மகிழ்ச்சி!
1036 views
Subscribe வேலூர் videosதிருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் அடுத்த கோணலூர் கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளிநாட்டு பறவைகள் இடப்பெயர்ச்சி அடைந்து இந்தியாவிற்கு வருவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பறவைகள் தங்கி செல்கின்றன. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்ட ஆவூர் அடுத்த கோணலூர் கிராமத்தில் உள்ள ஏரியில் குருட்டு கொக்கு, உன்னி கொக்கு, வெள்ளை கொக்கு உள்ளிட்ட நம் நாட்டு கொக்குகளும் அரிய வகை இனங்களான நத்தைக்குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழை கிடா, கரண்டிவாயன் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்கின்றது.அதிக அளவில் விவசாய செய்யக்கூடிய மாவட்டமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்பொழுது அதிக அளவிலான வெளிநாட்டு பறவைகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.