பிளாஸ்டிக் அரிசி வழங்கியதாக ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
1003 views
Subscribe வேலூர் videosநாட்றம்பள்ளி அருகே ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வழங்கியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு...ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்த தாசில்தார்..திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் ரேஷன் கடை அமைந்துள்ளது இந்த கடையில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.. இந்த நிலையில் கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாகவும் அதே நேரத்தில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் திடீரென ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தாசில்தார் குமார் அரிசி முறையாக நல்ல அரிசி வழங்கப்படுவதாகும் இதை தவறுதலாக பிளாஸ்டிக் அரிசி என பொதுமக்களிடம் வதந்தியை பரப்பியதாகவும் எனவே இது நல்ல முறையில் வழங்கபடும் அரிசி எனவும் மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை எனவும் கூறி பொதுமக்கள் அங்கிருந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.