சித்ரா பவுர்ணமி முன்னிட்டு -144 தடை உத்தரவால் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!
1066 views
Subscribe வேலூர் videosராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாபேட்டை மற்றும் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு இடையே மிக பிரம்மாண்டமான முறையில் கஞ்சனகிரி மலை சிவன் கோவில் அமைந்துள்ளது.மேலும் கோவிலில் நிர்வகிப்பதில் லாலாபேட்டை மற்றும் முகுந்தராயபுரம் ஆகிய இரண்டு ஊராட்சி பகுதியை சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே கடந்த நான்கு மாதங்களாக தகராறு நீடித்து வருகிறது. இதன் காரணமாக உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ஏராளமான மக்கள் சிவனை தரிசனம் செய்ய வருவது வழக்கம் ஆனால் இரண்டு ஊராட்சி தரப்பினர் மோதல் காரணமாக மாவட்ட காவல் துறையினர் காஞ்சனகிரி மலைக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மலைக்கு மேல் மற்றும் கீழ் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர்.இதனால் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சிவ பெருமானை தரிசிக்க முடியாமல் போனது பின்னர் அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் பலர் மலையின் கீழ் பகுதியில் சிவபெருமான் நடராஜர் சிலை வைத்து அபிஷேகம் செய்து சிவ பஜனை பாடல்களை பாடி வாய்ப்பாடு செய்தனர் மேலும் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு கோவிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் அமைதியான முறையில் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.