முள்ளிப்பட்டு அக்னி வசந்த விழா துரியோதனன் படுகளம்!
1047 views
Subscribe வேலூர் videosஆரணி அருகே உள்ள முள்ளிபட்டு கிராமத்தில் அக்னி வசந்த விழாவில் துரியோதன படுகளம் நிகழ்ச்சியில் நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து அசத்தினார்கள்.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருவிழாவை கண்டு ரசித்தனர்.வட தமிழகத்தின் முதன்மையான திருவிழாவான துரியோதனன் படுகளம் அக்னி வசித்து விழா துரோபதி அம்மன் ஆலயத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிபட்டு கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் சமேத தர்மராஜா கோவிலில் அக்னி வசந்த விழாவில் 18ம் நாளான நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக பாஞ்சாலியம்மன் ஆலய வளாகத்தில் துரியோதனின் உருபொம்மையை வரைந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி துரியோதனை பீமன் வீழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது .இதனையொடுத்து பாஞ்சாலி சபதம் நிகழ்வை நாடக கலைஞர்கள் தத்ரூபாக நடித்து காட்டி அசத்தினார்கள்.இதில் ஆரணி சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர் திருவிழாவை கண்டு களித்தனர்.