வன்னிவேடு ஊராட்சியில் சாலை அமைக்கும் பூமி பூஜை அமைச்சர் ஆர் காந்தி தொடங்கி வைத்தார்!
1031 views
Subscribe வேலூர் videosராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு ஊராட்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022-23 ஆண்டிற்கான ரூபாய், 48 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தேவதானம் முதல் கீழ் தேவதானம் வரையிலான சாலை அமைக்கும் பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை செய்து தன் கைக்கரங்களால் தீபாராதனை காண்பித்து பூ மலர்களை தூவி ஜேசிபி இயந்திரம் மூலமாக தொடங்கி வைத்து கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி ,வன்னிவேடு ஊராட்சி மன்ற தலைவர் கற்பகராணி சக்திவேல்குமார், ஒன்றிய பெருந்தலைவர் சேஷாவெங்கட் மற்றும் அரசு அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..