வடஆண்டாப்பட்டு பழமை வாய்ந்த ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!
1052 views
Subscribe வேலூர் videosதிருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகர், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ ஓம் சக்தி உள்ளிட்ட நவகிரகம் மற்றும் விமான கோபுரங்களுக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அஷ்டபந்தனை மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.வடஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ செல்வவிநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் கிராம பொது மக்களின் பங்களிப்புடன் பல லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஒரு வருடமாக கோவில் புரைமைக்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக கணபதி ஓமத்துடன் மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்று இன்று நான்காம் கால மகாலட்சுமி ஹோமம் 108 மூலிகை பொருட்களை கொண்டு யாகசாலையில் யாகம் நடத்தப்பட்டு பிரதான கலசத்திற்கு சிவப்பு புஷ்பா அலங்காரம் காமாட்சி அம்பாளுக்கு 108 பழ வகை திரவியங்களினால் பூர்ணகிஹீதி செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து கலசங்கள் ஊர்வலமாக கோவிலை சுற்றி கொண்டுவரப்பட்டு கோபுர உச்சியில் உள்ள கலசர்த்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, ஏராளமான பக்தர்களுக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.