15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 47 அடி கொடிமரத்திற்குகும்பாபிஷேகம்!
1042 views
Subscribe வேலூர் videosஸ்ரீ நவநீத கோபாலகிருஷ்ணன் ஆலயத்தில் சுமார் 47 அடி கொண்ட கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த மேக்களூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ நவநீத கோபாலகிருஷ்ணன் ஆலய வளாகத்தில் சுமார் 15 லட்சம் மதிப்பில் 47அடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது.முன்னதாக கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், கொடிமரம் அபிஷேகம், மூலமந்திர ஹோமம், கருவறையில் சாமிக்கு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மேளதாளம் வேதமந்திரங்கள் முழங்க கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்று, புனித நீர் ஊற்றப்பட்டு பொதுமக்களுக்கு தெளிக்கப்பட்டது. இதில் மேக்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.