ஒண்ணுபுரம் பகுதியில் சாயக் கழிவுகளால் விவசாய நிலத்தில் கலப்பதால் பாதிப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தின் வழியாக ஆரணி நாகநதி ஆற்றில் இருந்து ஆற்று நீர் கால்வாய் வழியாக ஒண்ணுபுரம் , மேல்நகர், கீழ்நகர், பெரிய அய்யம்பாளையம், பாளைய ஏகாம்பரநல்லூர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பாசன ஏரிகளுக்கு இந்த கால்வாய் வழியாக ஆற்று நீர் கொண்டு செல்லப்பட்டு விவசாயிகள் ஏரிகளை நிரப்பி விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் இந்த ஆற்று நீர் செல்லும் ஏரி கால்வாயில் ஒண்ணுபுரம் கிராமத்தில் நெசவாளர்கள் துணி நூல்களுக்கு பலவண்ண சாய கழிவுகளை பயன்படுத்தப்படும் சாயக்கழிவுகள் அனைத்தும் இந்த ஆற்று நீர் ஏரிக்கால் வாயில் கலப்பதால் இந்த வற்றாத நாகநதி ஆற்றில் இருந்து செல்லும் ஆற்று நீரில் சாயக் கழிவுகள் கலப்பதால் நீர் மாசுபடுகின்றன.இந்த சாய கழிவுகள் கலந்து செல்லும் நீரானது ஏரி நீரில் கலப்பதால் ஏரி நீர் மாசு படுவதுடன் அந்த நீரை விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்பட முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.மேலும் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரி நீரில் சாயக் கழிவுகள் கலப்பதால் நீர் மாசுபடுவதால் குடிநீர் பயன்படுத்தப்பட முடியாமல் பொதுமக்கள் வருகின்றனர்.எனவே இந்தப் பகுதியில் நெசவாளர்கள் பயன்படுத்தப்படும் சாயக்கழிவுகளை குறிப்பிட்ட பகுதியில் தேங்கும் அளவிற்கு தொட்டிகள் அமைக்கப்பட்டு அந்த நீரை அந்த தொட்டிகளில் விட அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நெசவாளர்கள் பயன்படுத்தப்படும் சாயக்கழிவுகளை ஆற்று நீரில் கலக்காமல் விவசாய நிலங்களையும் பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடை இன்றி சுத்தமான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதியில் வாழும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.velloreTimesXP TamilUpdated: 10 Jun 2023, 5:43 pm