டாட்டா ஏஸ் மீது பேருந்து மோதி விபத்து: 3 பேர் காயம்!
1049 views
Subscribe வேலூர் videosதிருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நெய்வாநத்தம் அருகே திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்து முன்னாடி சென்ற டாட்டா ஏசி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் டாட்டா ஏசி வாகனத்தில் விழுப்புரம் மாவட்டம் ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த எட்டு பேர் பயணம் செய்தனர். அதில் வீரம்மா,அஞ்சவவை,ஏழுமலை, மூன்று பேர் காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அரசு பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். விபத்து காரணமாக பேருந்து முன் பக்கம் பலத்த சேதம் ஏற்பட்டது.விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வேட்டவலம் போலீசார் காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்சில் உதவியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.