ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சந்தையில் 1.கோடி ரூபாய் மதிப்பில் ஆடுகள் விற்பனை அமோகம்!
1065 views
Subscribe வேலூர் videosராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருவண்ணாமலை வேலூர், திருப்பத்தூர் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் வெளிமாநிலமான ஆந்திரா, மாநிலம் சித்தூரிலிருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தையில் பொருட்களை வாங்கவும் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை 22-ஆம் தேதி ரம்ஜான், பண்டிகை முன்னிட்டு வார சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான வாகனங்களின் மூலமாக ஆடுகளை வாங்கவும், விற்பனை செய்ய வியாபாரிகள் பொதுமக்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை முதலே வார சந்தையில் குவிந்தனர். மேலும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் அனைத்தும் 3 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனை நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக சந்தையில் 1.கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக சந்தை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது..