செங்கம் பகுதி கோடை காலத்தில் மூடுபனி!
1009 views
Subscribe வேலூர் videosதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள மேல் செங்கம் தண்டம்பட்டு அந்தனூர் - பக்கிரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென காலை முதல் மூடுபணி பொழிந்ததால் பொதுமக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர் பருவநிலை என்பது வழக்கமாக சித்திரை மாத கத்திரியின் போது வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் சிரமத்திற்க்கு உள்ளாவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு கத்திரி வெயிலின் போது தொடர் மழை பெய்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியதோடு மட்டும் அல்லாமல் கத்திரி வெயிலின் தாக்கம் தெரியாமல் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுஅதுமட்டும் அல்லாது தற்போது காலை முதல் மூடுபனி பொழிவதால் பொதுமக்கள் மேலும் ஆச்சரியத்தில் உள்ளனர்.சூரியன் உதித்தும் மூடுபனி தொடர்ந்து வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டு வாகனத்தை இயக்கினர்.