அண்ணாமலையார் கோவிலுக்குள் உரிமையாளர் போல் கேக்கு வெட்டி கொண்டாடிய ஊழியர்!
1043 views
Subscribe வேலூர் videosபஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.குறிப்பாக அண்ணாமலையார் கோவிலில் பணியாற்றுவதற்காக பணியாளர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.அண்ணாமலையார் கோயில் 3ஆம் பிரகாரத்தில் இருக்கும் அண்ணாமலையார் பாதம் பேகோபுரத்திற்கு அருகில் உள்ள இடத்தில் அப்பு என்ற கோவில் ஊழியருக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கோவில் வளாகத்திற்குள்ளேயே கேக் வெட்டி ஊழியர்கள் கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நேற்று விபூதி பாக்கெட் விவகாரத்தில் இரண்டு குருக்கள் சஸ்பென்ஸ் நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்யும் நிலையில் கோவிலுக்குள் பணியாற்றும் ஊழியர்கள் கோயிலுக்குள்ளேயே பிறந்தநாள் கேக் வெட்டி அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் அண்ணாமலையார் கோவிலின் உரிமையாளர்கள் போல் கோவில் வளாகத்திற்குள்ளேயே கேக் வெட்டிய ஊழியர்கள் மீது கோவில் நிர்வாகம் எத்தகைய நடவடிக்கை எடுக்கப் போகிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.