வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி மனு வழங்கும் நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!
1036 views
Subscribe வேலூர் videosராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜாமபந்தி மனு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் தீர்வாய் அலுவலரும் உதவி ஆணையர் கலால் சத்தியபிரசாத் தலைமையில் நடைபெற்றது.இந்த ஜமாபந்தி மனு வழங்கும் நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களிடம் இருந்து இணையதளம் மூலமாக பெறப்பட்ட மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார்.அதன்படி இன்று வாலாஜாப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அரப்பாக்கம், தாழனூர், அருங்குன்றம், மேல்குப்பம், விஷாரம், கத்தியவாடி, கூராம்பாடி, ஆயிலம், நந்தியாலம், வேப்பூர், கீழ்குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கு இன்று முதல் நாள் ஜமாபந்தி மனு வழங்கும் நிகழ்வு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தீர்வாய அலுவலர் மற்றும் உதவி ஆணையர் கலால் சத்தியபிரசாத் தலைமையில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வாரிசு சான்று, உள்ளிட்ட மனுக்களை பொதுமக்களிடம் ஆன்லைன் வழியாகவும் நேரடியாகவும் வருவாய துறை அலுவலரை சந்தித்து மனுவினை வழங்கினர்கள் பின்னர் மனுவை பெற்றுக் கொண்ட தீர்வாய உதவி ஆணையர் சத்தியபிரசாத் பொதுமக்கள் வழங்கி உள்ள அனைத்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.அதனைத் தொடர்ந்து இந்த ஜமாபந்தி மனு வழங்கும் நிகழ்வு வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்