ஐந்தாண்டுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா!
1036 views
Subscribe தமிழ்நாடு videosதிருவாரூர் அருகே உள்ள குடவாசல் வீரமாகாளியம்மன் கோவிலில் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஐந்து நாட்கள் மட்டுமே பார்க்கும் அம்மனின் பூஜை இன்று முதல் 30.05.2023 வரை நடக்கின்றது, இந்த கோவில் தலவரலாறு சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் அதே போன்று சோழர்களுக்கும் சேரர்களுக்கும் அடிக்கடி போர் நடைபெற்று வந்துள்ளது. அப்போது போருக்கு செல்லும்போது முதலில் அவர்கள் வணங்குவது காளியம்மனை தான் ஆரம்ப காலத்தில் சிறு மர கட்டளை வழிபட்டு வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து பெரிய உருவம் செய்து அதனை வழிபட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் இந்த காளியம்மன் இதேபோன்று ஏழு ஊர்களில் காளியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஆண்டு காரைக்கால் பகுதியில் உள்ள திருமலைராயன்பட்டினத்தில் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. தற்போது குடவாசலில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் இந்த ஆண்டு தற்போது ஐந்து நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. அம்மனிடம் இந்த ஆண்டு வேண்டினால் அடுத்த ஆண்டுக்குள் அந்த காரியம் நடைபெற்று விடும் எனவும் இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் திருமணம் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து கோவில்களுக்கு வரிசை பொருட்கள் வழங்கி நேர்த்திக்கடன் செய்து வருகின்றனர் .அதன்படி இன்று வானவேடிக்கையுடன் வீடுகள் தோறும் சிவன், காளி ,அம்பாள் நடனங்கள் நடைபெற்றது . இதனையடுத்து சுமார் 15க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மஞ்சள் ,வளையல் மற்றும் அனைத்து வகை பழங்கள் வரிசைத்தட்டுகளை வைத்து குடவாசல் நகரப்பகுதியில் உள்ள அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. இதனை தொடர்ந்து அதிகாலை அம்மன் பெட்டியில் இருந்து திறக்கப்பட்டு காளியம்மன் அலங்கரிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் இந்த விழா நடைபெறும் ஐந்து நாட்களுக்கு பிறகு அம்பாளை ஒரு பேழையுனுள் கிடத்தி ஒவ்வொரு நாளும் பூஜை செய்து வருவார்கள். , மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐந்து தினங்களுக்கு மட்டுமே அம்பாள் பேழையுனுள் இருந்து வெளிக்கொண்டு வரும் அம்மனை காண தமிழ்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் இந்த திருவிழாவிற்கு அனைவரும் ஒன்று கூடி பங்கேற்று வருகின்றனர் இதன் பிறகு வரும் 2028-ல் தான் அம்பாளை தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.