மன்னார்குடியில் ஸ்வர்ண வாரகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமி விழா
Subscribe தமிழ்நாடு videos
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இரட்டைபுலி ரோட்டில் அமைந்துள்ள ஸ்வர்ண பைரவர் கோவிலில் ஸ்வர்ண வராகி அம்மன் சன்னதியில் இன்று 5-ம் நாள் ஆஷாட நவராத்திரி விழா விமர்சையாக நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோம பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்பகலச யாகசாலை பூஜை பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து ஸ்வர்ண வராகி அம்மனுக்கு மஞ்சள் , பால் , தயிர் , குங்குமம் , சந்தனம் , வாசனை திரவியம் பொருட்களால் அபிஷேக செய்து தேங்காய் பூவினால் சிறப்பு அலங்காரம் செய்து ஸ்வர்ண வாராகி அம்மனுக்கு தீபாராதனை நடைப்பெற்றது. இவ்விழாவில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.