சாலை அமைத்த ஒப்பந்ததாரிடம் பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது
1006 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை குண்டு பட்டி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை கூடலூரை சேர்ந்த அஜித் குமார் எடுத்து பணிகள் செய்து வந்துள்ளார் . இந்நிலையில் இந்த குண்டு பட்டி பகுதியைச் சேர்ந்த சிவா 24, ஜெயக்குமார் 39, ஆகிய இருவரும் இந்த பகுதியில் தார் சாலை சரியாக அமைக்கவில்லை என்று கூறி ஒப்பந்ததாரர் அஜித்குமாரிடம் தகராறு செய்து உள்ளனர். நாங்கள் பிரச்சனை செய்யாமல் இருக்க எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இது பற்றி அஜித் குமார் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். அஜித்குமாரின் புகாரின் அடிப்படையில் தார் சாலை அமைத்த ஒப்பந்ததாரிடம் பணம் கேட்டு மிரட்டிய சிவா மற்றும் ஜெயக்குமாரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.