திருச்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு அழைப்பு!தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் நாளை மறுநாள் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெறவுள்ள மாபெரும் வேளாண்மை கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி, 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகளை வழங்கவுள்ளார்.