சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் விழா!
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று காலை 10:30 மணிக்கு மேல் சித்திரை தேரோட்ட விழா நடைபெற உள்ளது இதற்காக நேற்று மாலையிலிருந்து தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் பாதயாத்திரையாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருவழிப் பாதையில் பாதியாக பிரித்து நடந்து செல்லும் பக்தர்களுக்கு காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர் ஆனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை என்பதால் மதுரை தஞ்சை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள்சமயபுரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதால் இரண்டு கிலோமீட்டர் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையாக போக்குவரத்துக் மாற்றம் செய்யப்படாததால் இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் இன்று காலை 10:30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக நடந்தே வருவதால் போக்குவரத்து மாற்றத்தை உடனே சீர் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.மேலும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், தேர் திருவிழாவை காண வந்த பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் 3 ஏ டி எஸ் பி,18 டிஎஸ்பி, 25 காவல் ஆய்வாளர்கள், 60 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1267 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.trichyTimesXP TamilUpdated: 18 Apr 2023, 4:07 pm