கார்ப்பரேட்-க்கு ஒரு சட்டம் சாமானியர்களுக்கு ஒரு சட்டம் -விக்கிரமராஜாதமிழ்நாடு UPVC ஜன்னல் மற்றும் கதவுகள் தயாரிப்பாளர் சங்கம் துவக்கவிழா திருச்சியில் நடைபெற்றதுகட்டுமானத்துறையில் இன்றைய காலகட்டத்தில் யுபிவிசி ஜன்னல்கள் மற்றும் கதவுகள் முக்கிய அங்கம் வகிக்கிறது, மரக்கதவுகளுக்கு மாற்றாக கண்ணை கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் UPVC ஜன்னல் மற்றும் கதவுகள் தயாரிப்பு மற்றும் விற்பனை பணியில் ஈடுபட்டு வருபவர்கள் ஒருங்கிணைந்து தமிழ்நாடு UPVC ஜன்னல் மற்றும் கதவுகள் தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் புதிய சங்க துவக்க விழா இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் சங்கத்தின் தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அமைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு விக்கிரமராஜா மற்றும் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க விக்கிரமராஜா கூறுகையில்... தமிழக அரசு கொண்டு வந்த 12மணி நேர வேலை திட்டத்தினை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரித்து நன்றி தெரிவிப்பதாகவும், இதன்மூலம் வடமாநில மக்களுக்கு இணையாக தமிழக மக்களும் உழைப்பார்கள். உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் என்பது வியாபாரிகளை நசுக்குவதாக உள்ளது என்றும், வணிகத் துறையை காக்கும் வகையில் அரசு சட்டங்கள் இயற்ற வேண்டும். மேலும் கலப்படத்தில் ஈடுபடுபவர்கள் மீது உச்சபட்ச தண்டனையை அரசு வழங்கினால் இயக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது என எச்சரிக்கை விடுத்தார்.எம்ஆர்பி விலைக்கு குறைவாக விற்பனை செய்து அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை, மாறாக சாமானிய வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் அத்துமீறல் இல்லாமல் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 24 மணி நேரம் தங்குதல் இன்றி கடைகள் இயங்க வணிகர் சங்க பேரமைப்பு வழிவகை செய்யும் என தெரிவித்தார்