அரசு பள்ளி ஆசிரியை மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை
1005 views
Subscribe திருச்சி videosதிருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள சீதாலட்சுமி நகரில் போக்சோ வழக்கில் தொடர்புடைய அரசு பள்ளி ஆசிரியை மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் இவர் இரண்டாவது குற்றவாளியாக உள்ளார்.திருச்சி துறையூர் அருகே தனியார் பள்ளி எதிர்ப்புறம் வசிப்பவர் குணசேகரன். இவருடைய மனைவி 32 வயதான லில்லி. இவர் துறையூர் தாலுகா நெட்ட வேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 8 ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர் மீது முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் தொடர்புடைய இரண்டாவது குற்றவாளி ஆவார் இதனால் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மண்ணச்சநல்லூர் சீதாலட்சுமி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்த லில்லி நேற்று துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.