ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேரோட்ட விழா!
1074 views
Subscribe திருச்சி videosதிருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா நாளை காலை நடைபெற உள்ள நிலையில் எட்டாம் நாள் விழாவில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி வகையறா கண்டருளிய நம்பெருமாள் - நாளை காலை 6:00 மணி அளவில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.108 வைணவ திருத்தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வைபவங்கள் நடைபெற்றாலும் - ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஒன்று சேர்ந்து வழிபடும் விழாவாக சித்திரை தேரோட்டம் உள்ளது.அந்த வகையில் சித்திரை தேரோட்டத்திற்கான கொடியேற்ற விழா கடந்த 10ம் தேதி நடைபெற்றது - இதனை அடுத்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளியநம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்தார் - எட்டாம் நாள் திருவிழாவான இன்று தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் ஆலயத்தை சுற்றி வந்து திருத்தேருக்கு முன்பாக வையாளி வகையறா கண்டறிருளியது கன்கொள்ளா காட்சியாக இருந்தது.முன்னும் பின்னும் செல்லும் கோன வையாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்காக திருத்தேருக்கு முன்பாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்தனர் - சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை காலை நடைபெற உள்ளது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பாக பல்வேறு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.