முத்தரையர் மணிமண்டபத்தை திறக்க கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர்
1060 views
Subscribe திருச்சி videosதிருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கட்டி முடிக்கப்பட்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தையர் மணிமண்டபத்தை திறக்க கோரி திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவிற்கு முன்னரே திறக்கப்பட வேண்டிய நிலையில் இருந்த மணிமண்டபம் ஓராண்டு காலத்திற்கு மேலாகியும் தற்பொழுது வரை இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. வருகின்ற மே 23ஆம் தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவிற்கு முன்னதாக மணிமண்டபத்தை திறக்க வேண்டும் எனக் கூறி பாஜக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் பாஜகவினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.