மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஏஐடியுசி கண்டன ஆர்ப்பாட்டம்
Subscribe திருச்சி videos
திருச்சி மாநகர் மாவட்டத்தின் ஏஐடியுசி சார்பாக உறையூர் குறத்தெருவில் மாதர் சங்கம், தொழிற்சங்கம்சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி வழங்க வலியுறுத்திகண்டன ஆர்ப்பாட்டம் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்தலைநகர் டெல்லியில் நாட்டிற்காக பல பதக்கங்களை பெற்று தந்த மல்யுத்த வீராங்கனைகளின் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய அதற்குக் காரணமான குற்றவாளிகளை தண்டிக்க செய்யக்கோரி தொடர்ந்து 13நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு உரிய நீதி வழங்கி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி அவர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.மாமன்ற உறுப்பினரும், ஏஐடியுசி மாவட்ட செயலாளருமான சுரேஷ், இப்ராஹிம், ராமராஜன், செல்வகுமார், மாவட்ட தலைவர் பார்வதி, அயிஷா உட்டபட 50 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்..