கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்!
1045 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது சுற்றுலா பயணிகள் அதிகம் இருக்கும் இடங்களில் முக்கியமானது. கொடைக்கானல் ஏரி கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வது தனி சுகம். கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ மூன்று படகு இல்லங்கள் உள்ளன தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இரண்டு படகு இல்லங்களும் நகராட்சி சார்பில் ஒரு படகு இல்லமும் உள்ளது. . கடல் படகு மற்றும் துடுப்பு படகுகளின் படகு சவாரி செய்து மகிழலாம் தற்போது சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் விதத்தில் நகராட்சி சார்பில் மூன்று நடன நீரூற்றுக்கள் ஏரியின் நடுவே அமைக்கப்பட்டு உள்ளது இது படகு சவாரி செய்பவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அதிக அளவிலான படகுகள் இயக்கப்படுவதால் அடகு சவாரி செய்பவர்களுக்கு ஏதாவது விபத்துக்கள் ஏற்பட்டால் அவர்களை மீட்பதற்குரிய ரெஸ்க்யூபோட் மூன்று படகு இல்லங்களிலும் இல்லை. எனவே ஆபத்தில் இருக்கும் படகுகளின் பயணம் செய்யும் பயணிகளை மீட்க இது போன்ற படகுகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்