களைகட்டிய வள்ளி கும்மி ஆட்டம்!தாராபுரம் அருகே 800, பேர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்ட கலை நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கானோர் கண்டு களிப்பு! வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை அரசு விழாக்களில் நடத்த அனுமதி வழங்க கோரிக்கை! திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே பவளக்கொடி வள்ளி கும்மி கலை குழுவினர் சார்பில் ஆத்தனூர் அம்மன் கோவில் மைதானத்தில் 43,வது வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற விழாநிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஒரே இடத்தில் 800 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் ஆடிவிநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடி அசத்தினர். இதைக் காண கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வள்ளி கும்மியாட்டத்தை கண்டு களித்தனர். நிகழ்ச்சிக்குஆசிரியர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். வள்ளி கும்மியாட்ட ஆசிரியர்கள் அருணாச்சலம் மற்றும் மணி தெரிவிக்கையில் கொங்குமண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துயிர் பெற்று வருகிறது. பண்டைக் காலத்தில் கும்மி ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது. கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களைக் கொண்டே வந்துள்ளது. வைகாசியில் கொண்டாடப்படும் கோவில் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துக் கும்மியடிக்கின்றனர். நாட்டுப் புறப்பாடல்களும், பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் கும்மியடிக்கும்போது பாடப்படுவதுண்டு. அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்பி பற்றிய குறிப்புகள் உள்ளன. திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி வளர்ச்சியாலும், மேற்கிந்திய இசையான பேண்டு வாத்தியம், இன்னிசை கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி மீது மக்களுக்கு நாட்டம் குறைய தொடங்கியது. அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் , திருப்பூர்,கோவை ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்டம் கலை பயிற்சியை ஒரு சில ஆசிரியர்கள் இலவசமாக அளித்து வருகின்றனர்.கேரளாசெண்டை கலையை வளர்க்கும் வகையில் அதனை சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது. அப்பயிற்சி பெற விரும்புவோருக்கு பயிற்சி ஊக்கத்தொகையை அம்மாநில அரசு வழங்கி வருகிறது. அரசு பள்ளிகளில் வாரம் ஒரு முறை மாணவ மாணவிகளுக்கு பள்ளி கும்மியாட்ட பயிற்சி அளிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் பள்ளி கும்மியாட்டம் ஆடுவதன் மூலம் மாணவ மாணவிகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியம் பெறுவர். அது போல் தமிழக அரசும் நம்முடைய மாநிலத்தில் இது போன்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும் அரசு விழாக்களில் வள்ளி கும்மியாட்டத்தை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்இந்த வள்ளி கும்மியாட்டத்தை 5000,பேர் திருப்பூர் பகுதியில் கற்று 465 கோவில் திருவிழாக்கள் பொது நிகழ்ச்சிகள் திருமண நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மியாட்டத்தை ஆடிவந்துள்ளோம். தற்போது 43வது அரங்கேற்று விழா நடத்தி இருக்கிறோம் இந்த பாரம்பரிய வள்ளிகும்மி ஆட்டத்தை உலகறிய செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.என இவ்வாறு தெரிவித்தார்.