லக்கி பவன் ஹோட்டல் கழிவு நீரை பேருந்து நிலையத்தின் உள்ளேயே திறந்து விடும் அவலம்
1062 views
Subscribe திருப்பூர் videosதிருப்பூர் டாலர் சிட்டி பனியன் சிட்டி என்பது மட்டும் அல்லாமல் பல கோடி அந்நிய செலவாணி நீட்டி தரும் திருப்பூர் மாநகராட்சி நம்பி பல்வேறு நாடுகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து போகும் இடம் திருப்பூர் இந்த திருப்பூரில் மையப்பகுதியில் மாநகராட்சி சார்பில் பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிதாக பேருந்து நிலையம் அமைத்துள்ளனர் இந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெயர் சூட்டப்பட்டு திறப்பு விழா கண்டு சில மாதங்களே ஆகிறது ஆனால் இந்த பேருந்து நிலையம் முழுமை வேலைப்பாடுகள் முடிந்தால் தெரியவில்லை கடை வியாபாரிகள் தாங்கள் இஷ்டத்திற்கு கடைகளை இடித்து வாசல் அமைப்பதும் இன்னும் பல கடைகள் திறக்கப்படாமல் இருப்பதும் நடைமேடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதும் சமூக விரோதிகள் மது அருந்துவோர் இடமாகவே உள்ளது திருப்பூரில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் உள்ளே செயல்பட்டு வரும் ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பேருந்து நிலையத்தின் உள்ளேயே திறந்து விடப்படுகிறது. இதனால் பேருந்து நிலையம் முழுவதும் கழிவு நீர் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் தூர்நாற்றம் வீசும் இந்த கழிவு நீரில் நடந்தபடியே செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தினமும் இங்கு வரும் மாநகராட்சி அதிகாரிகள் இந்த கழிவுநீர் வெளியேற்றத்தை கண்டும் காணாமல் சென்று வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை முறையாக பராமரிக்கவில்லை என்றால் இன்னும் சில மாதங்களிலேயே பால் அடைந்த பஸ் நிலையமாக மாறிவிடும் இப்போது நடைமேடையில் குடிபோதையில் நபர்கள் படுத்து கிடப்பதும் பாலூட்டும் அறையை பாலானதுக்கு பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பழைய பேருந்து பராமரித்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் பராமரிப்பார்களா முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையத்தை பொருத்திருந்து பார்ப்போம்