ஹனுமந்தராய சுவாமி திருகோவில் தேர்திருவிழா!
1062 views
Subscribe திருப்பூர் videosதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள புரான சிறப்புமிக்க காடு ஹனுமந்தராய சுவாமி கோவில் தேர்திருவிழா இன்று ஆகமவிதிபடி கொடியேற்றத்துடன் துவங்கியது இவ்விழாவின் பொழுது கொடிமரத்தில் வஸ்திரங்கள் வைத்து வழிபாடு செய்தால் திருமணதடை நீங்கும், புத்திர பாக்கியம் உண்டாகும், பதவி உயர்வு கிடைக்கும் என்பதால் ஏராளமானோர் கொடிமரத்தில் வஸ்திரங்கள் வைத்து வழிபட்டனர். மேலும் இன்று துவங்கிய விழாவின் தொடர்ச்சியாக வருகின்ற வியாழக்கிழமை காலை திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெற உள்ளது. அன்று மதியம் 12மணி முதல் மாலை 5 மணிவரை தேர் நிலை நிறுத்தபட்டு மீண்டும் தேர் இழுக்கபட்டு நிலைக்கு கொண்டுவரப்பட உள்ளது