செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் பறிமுதல்-உணவுபாதுகாப்புத்துறை அதிரடி!
திருப்பூரில் சேர்க்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டார் மாம்பழம் அதிக அளவில் விற்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பூர் கலெக்டர் வினித் இந்திய ஆட்சிப் பணி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் ,உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, பாலமுருகன், தங்கவேல், கேசவராஜ், கோடீஸ்வரன், சிரஞ்சீவி, ரகுநாதன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நான்கு குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட கே எஸ் சி ஸ்கூல் ரோடு, தினசரி மார்க்கெட், அதியமான் வீதி, நொய்யல் வீதி மற்றும் வெள்ளியங்காடு ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் வாழைப்பழ குடோன்கள் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது இரண்டு மாம்பழ குடோன்களில் இருந்து சுமார் 3.5 (மூன்றரை) டன் அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி மூலம் உரக்கிடங்கிற்க்கு உரம் தயாரிப்பிற்க்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் ஆகும். இது தொடர்பாக 5 மொத்த விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள் வைத்திருந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக நியமன அலுவலர் அவர்கள் கூறுகையில் பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும் எத்திலின் ரசாயனத்தை பழங்களின் மேல் நேரடியாக படும்படியாக பழுக்க வைப்பதற்கு அனுமதி கிடையாது சரியான முறைகளை பயன்படுத்தி மட்டுமே பழங்களைகளை பழுக்க வைக்க வேண்டும். கால்சியம் கார்பைடு அசிட்டலின் போன்ற ரசாயனங்களை வைத்து பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க கூடாது. இவ்வாறு செயற்கையான முறையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படும் குறிப்பாக செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் சாப்பிட்டால் தோல் அலர்ஜி வயிற்று வலி வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்படும். ரசாயனமூலம் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் உட்பகுதி காயாக இருக்கும் பழச்சாறு அளவு குறைவாக இருக்கும் பழத்தின் இயற்கையான மனம் குறைவாக இருக்கும் சுவை குறைவாக இருக்கும். மாம்பழ விற்பனை உரிமையாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உணவு புகார் தொடர்பாக 9444042322 என்ற whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.tiruppurTimesXP TamilUpdated: 11 May 2023, 5:58 pm