காங்கேயம் அருகே ஆயில் மில்லில் தீ விபத்து
1033 views
Subscribe திருப்பூர் videosதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாவடிபாளையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஆயில் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு எரிந்து சேதமாகியது. காங்கேயம் ,ஊத்துக்குளி தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.காங்கேயம் சாவடிபாளையம் அருகே தம்புரெட்டிபாளையம் உள்ளது. இங்கு குமார் என்பவர் தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து ஆரோக்கிய ஆயில் மில் என்ற நிறுவனத்தை நடத்திவருகின்றார். இந்த மில்லில் தேங்காய் பருப்புகளை உடைத்து காய வைத்து எண்ணெய் தயாரித்து விற்பனை செய்துவருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு திடீர் என தேங்காய் பருப்பு வைத்திருக்கும் குடோனில் இருந்து புகை வந்துள்ளது, இதை பார்த்த ஆயில் மில்லின் காவலாளி தொலைபேசி மூலம் குமாருக்கு தகவல் தெரிவித்தார் . அதற்க்குள் மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அங்கு வந்த குமார் காங்கேயம் , ஊத்துக்குளி, தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தார் . பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த இரண்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் 12க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க போராடினர். தனியார் டிராக்டர் மூலமாக ஏராளமான தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டவரா போராடிய நிலையில் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும் நேற்றைய தினம் வாரவிடுமுறை என்பதால் மில்லில் பணிபுரியும் ஆட்கள் யாரும் இல்லாதல் உயிரிழப்புகள் போன்ற அசம்பாவிதங்கள் ஏதுமில்லை என்கின்றனர். மேலும் தீவிபத்திற்கு ஆனா காரணம் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இந்த தீவிபத்தில் தேங்காய் எண்ணெய் ஆலையில் இருப்பு வைத்திருந்த தேங்காய் பருப்பு, இயந்திரங்கள் ,கட்டிடங்கள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமாகியது. இதன் மதிப்பு பலலட்சம் இருக்கும் என தெரிவிக்கின்றனர்.தம்பி ரெட்டிபாளையம் பகுதியில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு, இயந்திரம் மற்றும் கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதமாகியது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.