கவுன்சிலர் பணம் கேட்டதாக கூறி பொய்யான ஆடியோ வெளியிட்ட நபர்
1029 views
Subscribe திருப்பூர் videosதிருப்பூரில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்கு கவுன்சிலர் பணம் கேட்டதாக கூறி பொய்யான ஆடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு!!!திருப்பூர் மாநகராட்சிக்கு உற்பட்ட 8 வது வார்டு ராஜா நகர் 3 வது வீதியில் சாக்கடை கால்வாய் கட்டாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாகவும்இதற்கு அப்பகுதியை சேர்ந்த நபர் கவுன்சிலர் வேலம்மாள் காந்தி 25 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாக ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதையடுத்து இன்று காலை கவுன்சிலர் வேலம்மாள் அவரது கணவர் காந்தி மற்றும் பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆடியோவில் பேசிய நபரின் வீட்டை முற்றுகையிட்டனர்.பொய்யான ஆடியோ பரப்பியதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதுபற்றிய தகவலறிந்த் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட திரண்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தினை களைத்தனர். இதுபற்றி கவுன்சிலர் வேலம்மாள் அவர்களின் கணவர் காந்தி கூறுகையில், ‘’பொது தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராகவும் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் இருக்கக் கூடிய இ.பி.சரவணன் என்பவர் கவுன்சிலருக்கு பெயரை பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சித்தரிப்பு செய்து ஆடியோ பதிவு செய்து பரப்பியதாக ஆடியோவில் பதிவு செய்த நபர் கூறியதை தொடர்ந்து அவதூறு ஆடியோ நபர் இ.பி.சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் மனு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இதே போன்று இ.பி.சரவணன் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் இதே போன்று ஆடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும் கவுன்சிலர் வேலம்மாள் கணவர் காந்தி கூறினார். ஆளும் அரசுக்கு ஆளும் கட்சியின் பெயரை பயன்படுத்திக் கொண்டும் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் உலா வரும் நபர் மீது நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து திரண்டு இருந்த பொதுமக்களை காவல்துறையினர் சமரசம் செய்து அனுப்பி இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.