களைக்கொல்லி மருந்து தெளித்து வேறு பயிர்கள் வளராததால் விவசாயி அதிர்ச்சி ;மண் வளம் பாதிப்பு!
Subscribe திருப்பூர் videos
களைக்கொல்லி மருந்து தெளித்ததால் மண் வளம் பாதிப்பு. வேறு பயிர்களும் வளராத தால் விவசாயி அதிர்ச்சி.பயிருக்கு களைக் கொல்லி மருந்து தெளித்து மண் மலடான சம்பவம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நல்லகாளிபாளையம் கிராமத்தில் அரங்கேறியுள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நல்லகாளிப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சங்கர். இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டு ஏக்கரில் கம்பு பயிரிட்டு இருந்தார். இவர் கம்பு பயிருக்கு வழக்கம் போல களையை அகற்ற களைக்கொல்லி மருந்தினை பயன்படுத்தி உள்ளார். களைக்கொல்லி மருந்து பயன்படுத்திய ஒரே வாரத்தில் இரண்டு ஏக்கர் கம்பு பயிறும் முழுவதுமாக கருகி விட்டன. அதிர்ச்சி அடைந்த விவசாயி சங்கர் அடுத்தடுத்து சாகுபடி செய்த மக்காச்சோளம் வெங்காயம் ஆகியவையும் கருகியதால் மிகுந்த நஷ்டத்துக்கு தள்ளப்பட்டார்.