கண்கானிப்பு கேமராவில் பதிவாவது தெரியாமல் தனியார் அலுவலகத்தில் நுழைந்து செல்போனை திருடிய நபர்!
1105 views
Subscribe திருப்பூர் videosதிருப்பூர் மாவட்டம் உடுமலையில் கோழித்தீவனம் வினியோகம்செய்யும் தொழில் செய்துவருபவர்பொன் கார்த்திகேயன்.உடுமலையிலுள்ள இவரது அலுவலத்தில் இவர் வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த விலையுயர்ந்த செல்போனை திருடி சென்றுள்ளார். அலுவலகம் திரும்பிய பொன்கார்த்திகேயன் செல்போனைகானாது அதிர்ச்சியடைந்து சி.சி.டி.வி.பதிவுகளை பார்க்க அதில் மர்மநபர் முதலில் உள்ளே வந்து ஒத்திகைபார்பதும் பின் செல்போனை எடுத்து செல்வதும் பதிவாகியிருந்தது.அந்த வீடியோவை சமூக வளைத்தளத்தில் பொன் கார்த்திகேயன் பதிவிட அது வைரலானது.இதனிடையே பொன்கார்த்திகேயன் அளித்த புகாரை தொடர்ந்து வழக்குபதிவு செய்துள்ள உடுமலை போலீசார் செல்போனை திருடிசென்ற நபரை தேடிவருகின்றனர்