மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது
1069 views
Subscribe திருப்பூர் videosதிருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் வங்கியில் (பெட் பேங்க், வங்கி சாரா நிதி நிறுவனம் ) வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகையை மீட்கும் போது அதே வாடிக்கையாளர் பெயரில் போலியாக நகைகளை அடகு வைத்து 81 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டு கணக்கு தணிக்கையின் போது 81 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதை கண்டறிந்த மண்டல மேலாளர் சரண்சிவகுமார் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட வங்கியின் மேலாளர் சிவா, உதவி மேலாளர் பிரபு மற்றும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் விஸ்வநாதன் என மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 81 லட்சம் ரூபாய் மோசடி செய்த மேலாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.