நெல்லை வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா!
1049 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லையில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகரநிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்றைய தினம் விமர்சியாக நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பத்தாம் திருநாள் ஆன இன்று தாமிரபரணி நதிகரையில் சுவாமி வரதராஜ பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது இதற்காக சுவாமி திருக்கோவிலில் இருந்து வெள்ளி பல்லக்கில் தாமிரபரணி நதிக்கரை தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது பின்னர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயார் உடன் தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்