உண்டியல் காணிக்கை பணத்தை திருடிய இரண்டு பெண்கள் கைது
1028 views
Subscribe திருநெல்வேலி videosதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீசங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. கோவிலில் அனைத்து உண்டியகளிலும் பக்தர்கள் போடப்படும் காணிக்கை பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் எண்ணுவது வழக்கம். இந்த நிலையில் இதற்கு பல்வேறு அறக்கட்டளை மற்றும் சேவா சங்கத்தினர் உண்டியல் பணத்தை ஈடுபாடோடு எண்ணுவது வழக்கம். இந்நிலையில் உண்டியல் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்த அரங்கம் முழுவதும் சிசிடிவி கேமராக்களின் கட்டுப்பாட்டில் இருந்து நிலையிலும் , அதுபோக நேரலையில் ஒரு கேமரா பதிவு செய்த நிலையிலும் இரண்டு பெண்கள் பணத்தை திருடும் காட்சிகளை கண்ட கோவில் நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்ததின் பேரில் சிவகாசி பகுதியைச் சேர்ந்த லட்சுமி, கலா ஆகிய இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உண்டியல் பணத்தை எண்ணும் அரங்கத்தில் அரங்கம் முழுவதும் சிசிடிவி கேமரா உட்பட நேரலை கேமரா ஆகியவை பதிவு செய்த போதிலும் இரண்டு பெண்கள் சாதுரியமாக பணத்தைத் திருடியது அனைவரும் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது