திரிபுராந்தீஸ்வரர் சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது!
1062 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை பாளையங்கோட்டை நகரில் மையப்பகுதியில் அருள் தரும் கோமதி அம்பாள் சமேத அருள்மிகு திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது மிக பழமையான இத் திருக்கோயில் கடன் நிவர்த்தி ஸ்தலமாக பக்தர்களால் வழிபட்டு வரப்படுகின்றது பல்வேறு திருவிழாக்கள் இத்திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் நடைபெற்றாலும் சித்திரை பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது அதன்படி இந்த வருடத்திற்கான சித்திரை பிரம்மோற்சவ பெருந் திருவிழா கொடியேற்றம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது இதற்காக அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாள் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து கொடிப்பட்டம் ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது தொடர்ந்து திரிபுராந்தீஸ்வரர் சன்னதி முன் அமைந்துள்ள கொடிமரம் அருகில் சுவாமி அம்பாள் ஏழுந்தருள பூஜைகள் நடைபெற்று திரு கொடியேற்றம் நடைபெற்றது பின்னர் கொடிமரத்திற்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கும் சுவாமி அம்பாளுக்கும் மகா தீப ஆராதனை காட்டப்பட்டது ஏராளமான பக்தர்கள் கொடியேற்றத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர், இன்று முதல் பத்து தினங்கள் நடைபெறும் சித்திரை பிரமோற்சவத்தில் ஏழாம் நாள் 63 நாயன்மார் வீதி உலாவும் ஒன்பதாம் நாள் திருத்தேர் உலாவும் நடைபெறுகிறது.